யாழ்.பருத்தித்துறையில் சமையல் பாத்திரத்துள் தவறி வீழ்ந்தவர் மரணம்!

0
307

யாழ்.பருத்தித்துறையில் வலிப்பு காரணமாக கறிச்சட்டிக்குள் விழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
குறித்த சம்பவம் பருத்தித்துறை – மந்திகை – சாவகச்சோி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் அல்வாய் வடக்கைச் சேர்ந்த இராசையா தீபன்குமார் (வயது41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அறிய வருவதாவது, குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவகத்தில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
திடீரென வலிப்புவந்ததால் அவர் கொதித்துக் கொண்டிருந்த கறிச் சட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார்.
சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை மரணமானார்.இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை வைத்தியசாலையின்
திடீர் மரண விசாரணை அதிகாரி ச. சிவராசா நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here