மரியாதைக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு!

0
771

தமிழக சட்டசபைத் தேர்தலில் தாங்களும் தங்கள் அணியும் பெற்ற வெற்றிக்கு முதற்கண் எமது வாழ்த்துக்கள்…இவ்வாழ்த்துக்கள் முற்றிலும் மரியாதை நிமித்தமானதே! ஏனெனில் தங்களது தந்தையின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய அநீதிகளைப்போல் #எக்காலத்திலும் அரங்கேறியிருக்கவில்லை…அவற்றை ஈழத்தமிழினம் மறக்கவுமில்லை – மறக்கப்போவதுமில்லை…அன்று தாய்த் தமிழகத்தில் ஆறு கோடித் தமிழர்களையும் தங்கள் தந்தை அணிதிரட்டியிருந்தால் எம்மினத்தின் கதை நச்சுப் புகையடித்து முள்ளிவாய்க்காலோடு முடிந்திருக்காது…

அவற்றுக்கெல்லாம் #பரிகாரஞ் #செய்வதற்குத் தங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்வரிய வாய்ப்பைத் தாங்கள் சரியாகப் பயன்படுத்தி ஈழத்தில் அரங்கேறிய தமிழினப் படுகொலைக்குச் #சர்வதேச #விசாரணை மட்டுமே தீர்வைத் தருமென்ற தீர்மானத்தை தமிழகச் சட்டசபையில் நிறைவேற்றி, அதை இந்திய மத்திய அரசின் முடிவாக மாற்றத் தாங்கள் உண்மையாக உழைக்க வேண்டும்…அல்லது ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு உடந்தையானவர்கள் என்ற #வரலாற்றுப் #பழியோடு ஈழத்தமிழர்களிடமிருந்து “தி.மு.க” நிரந்தரமாக அந்நியப்பட்டுப் போவதைத் தடுக்க முடியாது போய்விடும்…

வரலாற்றுக் #கடமையை நிறைவேற்றுங்கள்…அல்லது ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றில் “தி.மு.க” என்பது #கரும்புள்ளிகளால் #இரத்த #வாடையோடு பதியப்பட்டுவிடும்…

இப்பதிவு தங்களுக்கு மட்டுமல்ல தங்கள் தோழமைக் கட்சிகளான மரியாதைக்குரிய வை.கோபாலசாமி அவர்களின் “ம.தி.மு.க” மற்றும் மரியாதைக்குரிய திருமாவளவன் அவர்களின் “வி.சி.க” ஆகியவற்றுக்கும் பொருத்தமுடையதே!!!

(இது எனது தனிப்பட்ட பதிவு)

கனகரட்ணம் சுகாஸ் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here