யாழ்.உரும்பிராயில் விபத்து: 12 இராணுவத்தினர், 3 பொதுமக்கள் படுகாயம்!

0
264

யாழ். உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 12 சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது டிப்பர் வாகனம் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது.

சம்பவத்தில் இராணுவத்தினர் 12 பேரும் சிவிலியன்கள் 3 பேரும் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பரில் இருந்த இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைகளை இராணுவத்தினரும் காவல்துறையினரும் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here