காணாமல் போனோர் விவ­கா­ரத்­திற்கு உரிய தீர்வு காணப்­ப­ட­வேண்டும் :வீரகேசரி!

0
496

kalmunai_arpadam_002கொழும்பு மற்றும் அதனை அண்­டி­ய ­ப­கு­தி­களில் கடத்­தப்­பட்ட 11 அப்­பாவி பொது­மக்­களும் கொழும்பு சைத்­தி­ய­வீ­தியில் உள்ள கடற்­ப­டைத்­த­ளத்­திற்கு அரு­கி­லி­ருந்த இர­க­சிய இடத்­திலும் திரு­கோ­ண­மலை கடற்­ப­டைத்­த­ளத்­திலும் தடுத்துவைக்­கப்­பட்­டி­ருந்­தமை தொடர்பில் போதிய ஆதா­ரங்கள் தமக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும், திரு­கோ­ண­மலை கடற்­ப­டைத்­த­ளத்தில் தடுப்பு முகாம் ஒன்று இருந்­த­மைக்­கான ஆதா­ரங்­களும் அதில் அடங்­கு­வ­தா­கவும் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளனர்.
தெஹி­வ­ளையில் வைத்து 2009 ஆம் ஆண்டு ஐந்து மாண­வர்கள் கடத்­தப்­பட்டு காணாமல் போயி­ருந்­தனர். இதேபோல் கொழும்பில் மேலும் ஆறு பேர் அந்­தக்­கா­லப்­ப­கு­தியில் கடத்­தப்­பட்டு காணாமல் போயினர். இவர்கள் காணாமல் போனது தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணையில் நேற்று முன்­தினம் கோட்டை பிர­தான நீதிவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­த­போதே மேல­திக விசா­ரணை அறிக்­கை­யூ­டாக குற்­றப்­பு­ல­னாய்­வுப்­ பி­ரி­வி­னரின் மனி­தக்­க­டத்தல், மற்றும் படு­கொ­லைப்­பி­ரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்­த டி சில்வா நீதி­மன்­றத்தில் இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
இந்த அறிக்­கையில் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமை நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய தான் தனது குழு­வி­ன­ருடன் சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும், அதில் இர­க­சிய தடுப்பு முகாம் ஒன்று இருந்­த­மைக்­கான ஆதா­ரங்­களை இப்போது தம்மால் சேக­ரிக்க முடிந்­த­தா­கவும், கடத்­தப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் 11 பேரில் பலர் அங்கு தடுத்துவைக்­கப்­பட்­டமை தொடர்­பில் 22 ஆதா­ரங்கள் உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
அத்­துடன், முன்னாள் கடற்­ப­டைத்­ த­ள­பதி அட்­மிரல் வசந்த கரன்னகொட மற்றும் தற்­போ­தைய கடற்­ப­டைத் ­த­ள­பதி உள்­ளிட்ட பல கடற்­படை அதி­கா­ரி­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வாக்­கு­மூலம் பெற­வேண்டி உள்­ள­தா­கவும் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் மனி­தக்­க­டத்தல் மற்றும் படு­கொ­லைப்­பி­ரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்­த டி சில்வா மன்றில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
இந்த நிலையில், இந்த சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை விரைவுபடுத்த குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்த நீதிவான், சட்­டமா அதி­ப­ரிடம் ஆலோ­சனை பெற்று அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் பணித்­துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. யுத்தம் நடை­பெற்ற 2008 , 2009 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கொழும்பு உட்­பட நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பெரு­ம­ள­வான தமி­ழர்கள் வெள்ளை வேன்­களில் கடத்­தப்­பட்­டனர். இவ்­வாறு கடத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது குறித்து எது­வுமே தெரி­ய­வ­ர­வில்லை. படைத்­த­ரப்­பி­ன­ரா­லேயே இவர்கள் கடத்­தப்­ப­டு­வ­தாக சந்­தே­கங்கள் வெளி­யி­டப்­பட்­டன. யுத்­தத்தின் போது கைதுசெய்­யப்­பட்டோர் பலர் காணாமல் போயினர். கொழும்பில் நாள்­தோறும் கடத்­தல்கள் தொடர்ந்துவந்­தன. வீட்­டி­லி­ருந்து வெளியில் செல்லும் ஒருவர் மீண்டும் வீடு திரும்ப முடி­யுமா? என்ற சந்­தேக நிலை அந்­த­கா­லத்தில் காணப்­பட்­டது.
இவ்­வா­றான ஒரு சூழ்­நி­லை­யி­லேயே ஐந்து மாண­வர்கள் தெஹி­வ­ளையில் வைத்து கடத்திச் செல்­லப்­பட்­டி­ருந்­தனர். வெளிநாடு செல்­ல­வி­ருந்த ஒரு மாணவன் அவ­னது நண்­பர்­க­ளுடன் இரவு உண­வுக்­காக ஒன்­றாக சென்­ற­போதே இந்த ஐவரும் கடத்திச்செல்­லப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வாறு கடத்­தப்­பட்ட மாண­வர்­க­ளது பெற்­றோர்­க­ளிடம் கப்­பமும் கோரப்­பட்­டது. ஆனால், கடத்­தப்­பட்ட இந்த மாண­வரின் கதி குறித்து இது­வரை எது­வித தக­வல்­களும் வெளி­யா­க­வில்லை.
இந்த நிலையில், ஐந்து மாண­வர்­க­ளது பெற்­றோரும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஆட்­கொணர்வு மனுக்­களைத் தாக்கல் செய்­தி­ருந்­தனர். இந்த மனுக்­களை விசா­ரித்த மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் அது குறித்து விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்­திற்கு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது.
இதற்­கி­ணங்க நீதிவான் நீதி­மன்ற விசா­ர­ணைகள் நடை­பெற்­றன. இந்த சம்­பவம் தொடர்பில் விசா­ரணை நடத்­திய பொலிஸ் அதி­கா­ரிகள் சாட்­சியம் அளித்­தி­ருந்­தனர். இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய கடற்­ப­டையைச் சேர்ந்த சம்பத் முனசிங்க என்­ப­வ­ருக்கும் வேறு பல­ருக்கும் தொடர்பு இருப்­ப­தாக சாட்­சி­யங்­களின் போது தெரி­விக்­கப்­பட்­டது. கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் இந்த விசா­ரணை கடந்த முறை நடை­பெற்ற போது முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்னகொ­ட­விடம் இவ்­வி­டயம் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று மனு­தா­ரர்­களின் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ரா­ஜாவும் கோரிக்கை முன்­வைத்­தி­ருந்தார்.
இவ்­வா­றான நிலை­யி­லேயே தற்­போது விசா­ர­ணைகள் இடம்பெற்று வரு­கின்­றன. இந்தக் கடத்­தல்­க­ளுடன் கடற்­ப­டை­யினர் தொடர்புபட்­டுள்­ள­தாக சாட்­சி­யங்­களின் மூலம் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. கொழும்பில் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்தார். இந்த கொலைச்­சம்­ப­வத்­து­டனும் ஐந்து மாணவர் கடத்தல் விவ­கா­ரத்தில் தொடர்பு பட்­டி­ருப்­ப­தாக கூறப்­படும் கடற்­ப­டையைச் சேர்ந்த சம்பத் என்­ப­வ­ருக்கு தொடர்பு இருப்­ப­தாக நீதி­மன்­றத்தில் தகவல் அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.
இவற்­றி­லி­ருந்து கொழும்­பிலும் அதனைச் சூழ­வுள்ள பகு­தி­க­ளிலும், கடத்தல், மற்றும் படு­கொ­லை­களில் ஈடு­பட்ட குழு­வினர் கடற்­ப­டையை சேர்ந்­த­வர்கள் என்­பது புல­னா­கின்­றது. குற்­றப்­பு­ல­னாய்வு பொலி­ஸாரின் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தற்­போது இந் த விட­யங்கள் நிரூ­ப­ண­மா­கி­ வ­ரு­கின்­றன.
யுத்­தத்­தின்­போதும் அதற்கு முன்­னரும் காணாமல் போன ஆயி­ரக் ­க­ணக்­கான தமது உற­வு­களை தற்­போதும் மக்கள் தேடிவரு­கின்­றனர். காணாமல் போன தமது உற­வுகள் உயி­ருடன் இருக்­கின்­றார்­களா? அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது குறித்து அறிய முடி­யாது அவர்கள் நாள்­தோறும் தவித்து வரு­கின்­றனர்.
தமது உற­வு­களை அவர்கள் தேடித்­தேடி தற்­போது களைப்­ப­டைந்­து­விட்­டனர். அர­சாங்கம் அமைத்த நல்­லி­ணக்க ஆணைக்­குழு மற்றும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஆகி­யவற்­றிடம் அழு­து­பு­லம்பி சாட்­சி­யங்­களை அளித்தபோதிலும், இது­வரை எது­வித பலனும் ஏற்­ப­ட­வில்லை. காணாமல் போனோர் தொடர்பில் தற்­போதும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ர­ணை­களை நடத்தி வரு­கி­றது. பெரு­ம­ள­வானோர் இந்த ஆணைக்­குழு முன் தமது உற­வு­களை மீட்டுத் தரு­மாறு கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர்.
இதனை விட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வா­னது வெறும் கண்­ துடைப்பு என்றும் இதனால் எந்­த­விதப் பயனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என்று பெரு­ம­ள­வான மக்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­கின்­ற­ போ­திலும், காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு நடந்த கதி குறித்து அறியமுடி­யாது ஒவ்­வொரு உற­வு­களும் ஏங்கித்தவிக்­கின்­றன.
இவ்­வா­றான நிலையில் கொழும்பில் ஐந்து மாண­வர்கள் உட்­பட 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் போன சம்­பவம் தொடர்பில் தற்­போது கடற்­ப­டை­யினர் மீது குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றது. உண்­மை­யி­லேயே இந்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அறிவிக்கப்படவேண்டும். இதேபோல் நாட்டில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்பது குறித்த பதில் கூறவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இந்த பொறுப்பிலிருந்து அரசாங்கம் தவறிவிடமுடியாது.
ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­களின் போதும் இந்த விட­யங்கள் தொடர்பில் நிச்­ச­ய­மாக ஆரா­யப்­பட்டி ருக்கும். ஐ.நா.வின் அறிக்­கை­யா­னது செப்­டெம்பர் மாதத்தில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. முன்­னைய அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் தவ­றி­ழைத்­த­மை­யி­னா­லேயே சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட்­டது. எத்­த­கைய விசா­ரணை நடத்­தப்­பட்­டா­வது காணாமல் போன­வர்­களின் விவ­கா­ரத்­திற்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here