யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பணிமனையில் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல்!

0
281

தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் உள்ளிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு அன்னையின் திருஉருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தியிருந்தனர்.

சிறிலங்கா பேரினவாதத்தின் அடக்குமுறையையும் மீறிக் குறித்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here