அநீதியை போக்கிட அகிம்சை வழியில் ஆகுதியாகிய அன்னையே!

0
729

தியாக தீபம் அன்னை பூபதி.
🌺🌺 🌺🌺 🌺🌺🌺 🌺🌺

19/03/1988 _ 19/04/1988 உணவு தவிர்த்து இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனது உயிரை ஆகுதியாக்கிய நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவாக…!

ஆதிக்க பேய்களின்
ஆணவம் அடக்கிட
அகங்கார வர்க்கத்தின்
அநீதியை போக்கிட
அகிம்சை வழியில்
ஆகுதியாகிய அன்னையே

மட்டுநகர் மண்ணிலே
மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலே திட்டமிட்டு
தியாக வேள்வியில்
குதித்த எங்கள்
தியாக அன்னையே

இந்திய வல்லரசின்
அத்துமீறிய செயலை
தடுத்திட எழுந்திட்ட
அன்னையர் திலகமே
எங்கள் தியாகத்தின்
திரு உருவே

வேள்வித் தீயில்- பல
கேள்விகள் எழுந்த போதும்
தடைகள் பல வந்து
தடுத்திட்டபோதும்
தளராது கொள்கையில்
கோபுரமாய் நின்றவரே

அகிம்சைக்கு பெயர் போன
இந்திய அரசு உங்கள்
அகிம்சையை மதிக்காமல் போனதன் மாயம் தான் என்னவோ…?
மறந்திடக் கூடுமோ..? சிறப்பான
உங்கள் தியாகமதை

ஈழதேசம் இருக்கும் வரை
ஈகங்கள் வாழும் அம்மா
கடைசி தமிழன் உள்ளவரை உங்கள் தியாகங்கள் உலகமே போற்றும் அம்மா
தியாகி திலீபனின் வழி நின்ற
எங்கள் தியாகி அன்னை பூபதியே

காலங்கள் பல கடந்தும்
கோலங்கள் பல மாறிடினும்
உயர்ந்து நிற்கும்
உங்கள் தியாகத்திற்கு
எழுந்து நின்று
தலை வணங்குகிறோம் அம்மா.

அருந்தமிழ்
19/04/2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here