ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று மாலை நல்லடக்கம்!

0
485

மறைந்த ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

வடக்கு கிழக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள மக்கள் அரச அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் என இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து புனித செபஸ்தியார் ஆலயத்தில் உள்ள ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பாப்பரசரின் பிரதிநிதி உட்பட இலங்கையின் அனைத்து கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்களும் இணைந்து அஞ்சலி திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

இதேவேளை மன்னார் நகர பகுதியில் அமைக்கப்பட்ட ஜோசப் ஆண்டகையின் உருவச் சிலையை மாலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை திறந்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here