இன்றைய தினம் (19.03.2021) அன்னை பூபதி அம்மா அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட நாவலடி கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவு பீடத்தில் சர்வமதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மற்றும் முன்னாள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுடர்ஏற்றி அகவணக்கம் செலுத்தியுள்ளனர்.
33 வருடங்களுக்கு முன்னர் ( 19.03.1988 ) அன்னை பூபதி அம்மா அவர்கள் தனது உண்ணா நோன்பு போராட்டத்தை இதேநாளில் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.