பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 2ம் ஆண்டு நினைவேந்தல்!

0
925

பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 15.03.2021 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு Grigny யில் அமைந்துள்ள கல்லறையில் உணர்வோடு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

கல்லறைக்கான மலர்மாலையினை நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் துணைவியாரும் மூத்த புதல்வனும் அணிவித்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here