தாய்,தந்தை,மகள் விபத்தில் சிக்கி சாவு : மன்னாரில் சம்பவம் !

0
184

imageமன்னார் இலுப்பைக் கடவை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த விபத்தில் இந்த விபத்தில் பூ.தவராசா(வயது.55), அவரது மனைவி த.சகாயரூபி (வயது 50) இவர்களின் மகளான சு.சுகிந்தினி (வயது 27) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் மடு தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு முச்சக்கரவண்டி ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த வேளை மன்னார் நோக்கிச் சென்ற வான் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் அதில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் சுகிர்தினியின் மூன்று வயதுக் குழந்தை காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here