நீதிக்காகப் பயணிக்கும் அனைத்து அரசியல் சனநாயகப் போராளிகளின் கரங்களை இறுகப் பற்றிப் பயணிப்போம்!

0
337

எமது தாயக மக்களின் ஒட்டுமொத்த வலிகளையும் நெஞ்சிலே சுமந்து, தேசத்தின் இனவழிப்புக்கான நீதியையும் எமது தேசத்தின் விடுதலையையும் சர்வதேசம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் கடும் குளிருக்கு மத்தியில் ஐரோப்பிய நாட்டு அரசுகளின் கதவுகளைத் தட்டிப் பயணிக்கும் எம் தேசப் போராளிகளின் மகத்தான பணிக்கு சிரம் தாழ்த்துவதோடு, உள்ளன்போடும், உறுதியோடும் நாமும் தோள் கொடுக்கின்றோம். பறிக்கப்பட்ட எமது உரிமைகளைப் போராடிப் பெறவேண்டிய சூழமைவுக்குள் நாம் இருக்கின்றோம். நீதிக்காகப் பயணிக்கும் அனைத்து அரசியல் சனநாயகப் போராளிகளின் கரங்களை இறுகப் பற்றிப் பயணிப்போம் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here