மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு: தாதி படுகாயம்!

0
304

மட்டக்களப்பு – பூம்புகார், கண்ணகி அம்மன் கோவில் 3ம் குறுக்கு வீதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் தாதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சந்தேகநபர் பறவைகளை சுடும் எயார்கண் துப்பாகியைக் கொண்டு இரவு 9.30 மணியளவில் வீட்டின் மேல்மாடியில் இருந்து வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன்போது சத்தம் கேட்டு எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது குறி தவறி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தலைமை தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் 55 வயதுடைய நடராஜா ராதா என்பவரே படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார், துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here