யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின.
சில வைத்திய சேவைகள் தற்காலிகமான இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் சிகிச்சைகள் வழங்கப்படுவதாக யாழ் போதனா பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.











