முல்லைத்தீவுக் கடலில் காணாமற்போன மீனவர் சடலமாக மீட்பு!

0
509

வங்காள விரிகுடாவில் உருவாகிய “புரெவி” புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

மழை மற்றும் புயல் காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்றும் நந்திக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று (03) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு குறித்த வள்ளத்தை கரைக்குக் கொண்டு வருவதற்காகத் மீனவர் ஒருவர் தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்று காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது,

குறித்த வள்ளத்துடன் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் அவரைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

சம்பவத்தைத் தொடர்ந்து படையினருடன் மீனவர்கள் இணைந்து நந்திக்கடல் களப்பில் குறித்த மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த காணமல் போயிருந்த கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜெயசீலன் சிலக்சன் (வயது 26) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here