இலங்கையில் கொரோனாவிற்கு மேலும் ஐவர் பலி: இதுவரை 53 பேர்!

0
286

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (13) வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர்களின் விபரங்கள்,

கொழும்பு 14ஐ சேர்த்த 83 வயது பெண் வீட்டில் மரணமடைந்துள்ளார்.

சிலாபத்தை சேர்ந்த 68 வயது ஆண் முல்லேரிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

ரத்மலானையை சேர்ந்த 69 வயது ஆண் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

கொழும்பு 13ஐ சேர்ந்த 78, 64 வயது ஆண்கள் இருவர் தமது வீடுகளில் மரணமடைந்துள்ளனர்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 53 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here