பல்கலைக்கழக இராணுவ மயமாக்கம்: விரிவுரையாளர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

0
169

protest copyஅனைத்து பல்கலை விரிவுரையாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள  வேலை நிறுத்தம் செய்ததுடன் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு  கூறி  ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  சங்கம், கல்வியை பாதுக்காப்போம், கல்விக்குள் அரசியல் தலையீடக்கூடாது மற்றும் பல்கலைக்கழக இராணுவ மயமாக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மானியங்கள் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் பல் கலைக்கழக விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.மதியம் 11.00 மணியளவில் ஆரம்பமாகிய அடையாள வேலை நிறுத்தம் மதியம் 12.00 மணியளவில் நிறைவு பெற்றது.

குறிப்பாக சம்பள உயர்வு மற்றும் யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தில் அதிகரித்துள்ள அரசியல் தலையீடுகளுக்க எதிராக இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆசியர் சங்கத்தின் தலைவர் எஸ்.இராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

unnamed-1511 (1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here