முல்லைத்தீவிலும் அடையாள உண்ணாவிரதம்!

0
195

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் சாவகச்சேரி சிவன் ஆலயத்தின் இன்று (26) காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.

பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் மத்தியில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here