வவுனியாவில் நேற்று கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை!

0
142

வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்றுப் பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது.

இதனால் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள் ளதுடன், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடைமைகளும் நாசமடைந்துள்ளன.

அத்துடன் இரு ஆலயங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வீடுகள், வீதிகளில் நின்ற மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மரங்கள் வீழ்ந்தும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனால் 30 வரையான குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இதேவேளை, கடுமையான வரட்சி நிலவி வந்த நிலையில் நேற்று மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here