யாழ்.தொண்டமனாறு விபத்தில் குடும்பஸ்தர் பலி!

0
143

தொண்டமானாறு மூன்று சந்தியில் நேற்று இரவு இடம் பெற்ற வீதி விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொண்டமானாற்றைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உருத்திரன் திருவருட்செல்வன் (வயது 50) என்பவரே உயிரிழந்தார் என்று காவல்துறையினர்  தெரிவித்தனர்.

 மிதியுந்தில் பயணித்த குடும்பத்தலைவர் எதிரே வந்த உந்துருளி மோதியதில் வீதியில் சரிந்தார். படுகாயமடைந்த அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது வழியில் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

 உந்துருளியில் பயணித்த இளைஞர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here