யாழில் முன்னணியின் ஏற்பாட்டில் செஞ்சோலை நினைவேந்தல்!

0
217

இன்று 14.08.2020 வெள்ளிக்கிழமை செஞ்சோலை மாணவப் படுகொலையின் 14 ம் ஆண்டு நினைவேந்தல் யாழில் நினைவேந்தப்பட்டது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாட்டு உயிர் கொடை உத்தமர் நினைவாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகர், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள்,மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரும் இவ்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here