
ஆந்திரா – விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதி ஒன்றில் இன்று (9) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விடுதி சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

