வெற்றியின் பின்னர் தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் மலர்வணக்கம்!

0
267

இன்று (07.08.2020) வெள்ளிக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்களுடன் தியாக தீபம் திலிபன் நினைவிடத்தில் அகவணக்கம் செலுத்தி மலர்மாலை அணிவித்த பின்னர் வாக்களித்த அனைத்துள்ளங்களுக்கும்
நன்றிகளை தெரிவித்தனர்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் தூபியில் இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கட்சி ஆதரவாளர்கள் மலர்கொத்து வழங்கி தங்களுடைய வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் வேட்பாளர்களாக போட்டியிட்ட கனகரட்ணம் சுகாஷ், திருமதி வாசுகி சுதாகர், சட்டத்தரணி காண்டீபன், டிலான் பத்மநாதன் ஆகியோருடன் கட்சி ஆதரவாளர்களும் செயற்பாட்டாளர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here