யாழில் ஊடகவியலாளர் நிலக்சனின் 13 -ம் ஆண்டு நினைவேந்தல்!

0
202

சிறிலங்கா இனவழிப்புப் படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் இடம்பெற்றது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் குறித்த நிகழ்வு அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட நிலக்சனின் குடும்பத்தினர், உறவினர்கள், பாடசாலை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது மலர் மாலை அணிவித்தும், சுடர் ஏற்றியும், மலர்களைத் தூவியும் நிலக்சனுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

சகாதேவன் நிலக்சன் கடந்த 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சிறிலங்காப் படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அன்று அதிகாலை வேளை ஆடியபாதம் வீதி கொக்குவில் பகுதியில் உள்ள அவருடைய வீடு சிஸிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் இராணுவ ஒட்டு குழுவினராலும் முற்றுகையிடப்பட்டது.

வீட்டில் இருந்த சகாதேவன் நிலக்சனை விசாரிக்க வேண்டும் என்று கூறிய ஆயுதக் குழுவினர் வீட்டு வாசலில் அழைத்து விசாரித்தனர்.

இதன் போது சகாதேவன் நிலக்சனின் தாய் தந்தையர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட போது திடீரென சுட்டுப் படு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here