யானை தாக்கிய விரிவுரையாளர் இன்று உயிரிழந்தார்!

0
436

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் அவர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் கடந்தவாரம் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டபோதும் இன்றையதினமே சாவடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான காயத்திரி டில்ருக்சி (வயது-32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் அப்பகுதியில் கடந்த 19.07.2020 நடமாடியுள்ளனர்.

இதன்போது யானையை அவதானித்த இருவரும் வெவ்வேறு திசைக்கு ஓடியபோதே விரிவுரையாளரை யானை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here