நுணாவிலில் இளைஞனின் சடலம் மீட்பு!

0
308

கண்டி வீதி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து புதன்கிழமை காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதில் அதே இடத்தைச் சேர்ந்த 34 வயதான தங்கராசா சந்துரு என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெளிநாடொன்றில் இருந்து தற்சமயம் நாடு திரும்பியவர் எனவும் கொரோனா நிலைமை காரணமாக மீளவும் வெளிநாடு செல்ல முடியாத நிலையில் சொந்த ஊரில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here