யாழ்.உரும்பிராய் விபத்தில் இளம் மனைவி பலி; கணவர் படுகாயம்!

0
173

யாழ்ப்பாணம் – உரும்பிராய் சந்திக்கு அருகில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோயன் கஜேந்தினி (27-வயது) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் சந்திக்கு அண்மையில் குறித்த பெண் தனது கணவருடன் மிதியுந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பட்டா ரக சிற்றுந்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்ததுடன் அவரது கணவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here