ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன்று 12.07.2020 ஞாயிற்றுக்கிழமை வில்நெவ் சென்ஜோர்ஜ் பகுதியில் காலை 09 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்றது.
பொதுச் சுடரினை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் கி. கிருபானந்தன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 27.12.2007 அன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி ஈழவீரன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு.கிருபா, ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் கி. கிருபானந்தன் மற்றும் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள் வீரர்களுக்கு கைலாகு கொடுத்து வரவேற்று போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழ – ஊடகப்பிரிவு)