இலங்கையில் வேகமாகும் கொரோனா: இன்று மட்டும் 57 பேருக்கு உறுதி!

0
176

இலங்கையில் இன்று (11) இதுவரை 57 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,511 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 13 பேருக்கும், குறித்த மையத் தொடர்பினால் 39 பேருக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து அழைத்து வந்த நால்வருக்கும் குவைத்தில் இருந்து அழைத்து வந்த ஒருவருக்குமாக 57 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 520 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,980 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here