கிழக்கில் எருமைக்கும் எமனாக வந்த உந்துருளி!

0
218

மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை மண்முனை பாலம் ஊடாக பயணித்த உந்துருளி ஒன்று எருமை மாடொன்றுடன் விபத்துக்குள்ளாகி எருமை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. உந்துருளியில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்முனை பாலம் தொடக்கம் கொக்கட்டிச்சோலை பிரதான வீதி வரை மின்விளக்கு இல்லாது இருள் சூழ்ந்து இருந்தமையே இதற்குக் காரணமாகும்.

இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here