பூநகரி விபத்தில் பலியான பல்கலை. மாணவனின் இறுதி நிகழ்வில் கலங்கவைத்த காட்சி!

0
297

பூநகரியில் நேற்று டிப்பர் வாகனம்- உந்துருளி விபத்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவனின் இறுதிச்சடங்கு இன்று யாழில் இடம்பெற்றது. இதில் பலரையும் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விளையாட்டில் ஆர்வமுள்ள அந்த மாணவனின் உருவப்படத்தை தயார் செய்து, அவர் விளையாட்டில் பெற்ற பரிசில்களை அதன் முன் காட்சிப்படுத்தியுள்ளனர் பல்கலைக்கழக நண்பர்கள்.

மொரட்டுவ பல்கலைகழகத்தின் கணிய அளவியல் 3ஆம் வருட மாணவனான, பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியை சேர்ந்த மோகன் ஆகாஸ் (வயது 23) என்ற மாணவனே உயிரிழந்தார்.
நேற்றுக் காலை யாழிலிருந்து மன்னார் நோக்கி உந்துருளியில் சென்ற இளைஞனும், யாழ். வந்த டிப்பரும் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் மோதி விபத்திற்குள்ளாகியதில் மாணவன் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here