காலம் தந்த அற்புதக் கரும்புலிகளை வணங்குகிறேன்!

0
558

யூலை ஐந்து ஒரு நெருப்பு
மில்லர் எனும் கரும்பறவை
அந்த நாளில் இவன் அருகே
நின்ற அந்தக்களம் இன்றுவரை
நினைவில் மீளாத நாளாக
என்னுள் உறங்கிக்கொண்டே
இருக்கின்றது கைகுலுக்கி போனவன்
கண்ணெதிரே கரும்புலியாக
அந்த நெல்லியடி மண்ணில் வெடித்து
காற்றோடு கலந்தான் பிரபா அண்ணாவின்
தலைமையில் மடிந்த முதற்கரும்புலி
மில்லர்தான் அந்த வெற்றிகரமான
தாக்குதலை நெறிப்படுத்திய விதம்
பிரபா அண்ணாவை இன்றுவரை
நினைக்க வைக்கிறது. காலம் தந்த
அற்புதமான கரும்புலிகளை
நெஞ்சில் நிறுத்தி வணங்குகிறேன்……………

(குறித்த ஓவியத்தை தனது மனத்தில் இருந்த கற்பனையில் இடைத்தங்கல் நாடு ஒன்றில் இருந்து எந்த கணனி வசதிகள் அற்ற வேளையில் குறித்த உறவு வரைந்தமையை எமது எரிமலை ஊடகத்துகுத் தெரிவித்திருந்தார்.)

(புலத்தில் இருந்து உறவொன்றின் குரல்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here