மன்னாரில் இராணுவச் சோதனைச் சாவடியைத் தகர்த்த கனரக வாகனம்!

0
240

மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடி மீது மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் கனரக வாகனம் ஒன்று இன்று (25.06.2020) மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் கனரக வாகனம் மன்னார் நகரில் கழிவுகளை சேகரித்து பாப்பாமோட்டை பகுதியில் உள்ள மீள் சுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள பிரதான இராணுவ சோதனை சாவடி மீது மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது சோதனைச் சாவடிக்கு என வீதியில் அமைக்கப்பட்ட இராணுவ வீதித் தடைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சோதனை சாவடியில் வாகனங்கள் பதிவு செய்யப்படும் பகுதி முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here