பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 முதல் முடக்கநிலையில் தளர்வு!

0
172


வரும் ஜூலை 4 முதல் பிரித்தானியாவில் உணவகங்கள், விடுதிகள் மற்றும் சிகையலங்கார கடைகள் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

அதேபோல பொது இடங்களில் சமுக இடைவெளி தூரமும் இரண்டு மீட்டரிலிருந்து 1 மீட்டராக குறைக்கப்படுவதாகவும் கூறினார்.சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற இடங்களும் மீண்டும் திறக்கப்படும், ஆனால் உட்புற ஜிம்கள் போன்ற நெருக்கமான இடங்களுக்கு திறக்க அனுமதி இல்லை
பிரித்தானியாவில் ஜூலை 4 முதல் பார்கள், பப்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சிகையலங்கார நிபுணர்கள் திறக்கப்படும்.அப்போது சமூக தொலைதூர விதிகள் அமுலுக்கு வரும்.மேலும் நாட்டில் உள்ள இரண்டு வீடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரே வீட்டுக்குள் சந்தித்து, சமூக தூரத்தை கடைபிடித்து இரவில் தங்கலாம். ஆனால் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொள்ளக் கூடாது என்றார்.ஆனால் அனைத்து தளர்வுகளும் எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக்கொள்ளப்படும் என்று பிரதமர் எச்சரித்தார்.வீட்டிலும் மக்கள் சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும். கொரோனா அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருப்பதால், நாட்டு மக்கள் தங்கள் பொது அறிவைப் பயன்படுத்துவார்கள் என்று அரசு நம்புகிறது.கட்டுப்பாடுகள் எவ்வளவு தளர்த்தப்படுகிறதோ, அந்தளவுக்கு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை மக்கள் நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.திருமணங்களுக்கு 30 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள், மேலும் வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை சேவைகளை நடத்த அனுமதிக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here