முல்லைத்தீவில் உந்துருளி விபத்தில் இளைஞன் பலி!

0
322

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது கற்சிலை மடுவினை சேர்ந்த தங்கராசா ஜெனீவன் (வயது 29) என்ற இளைஞரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

உந்துருளியில் சென்ற குறித்த இளைஞன் கனரக ஊர்தி ஒன்றுடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கனரக ஊர்தியும் சாரதிதியும் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உயிரிழந்த இளைஞனின் உடலம் பி ரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here