யாழ்.பலாலி வீதியில் கோரவிபத்து: ஒருவர் பலி!

0
191

பலாலி வீதி – பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் இன்று (23) செவ்வாய்க்கிழமை காலை சிற்றுந்தும் உந்துருளியும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணம் செய்த வழக்கம்பரை, பண்ணாகத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிச் செல்லும் சிற்றுந்தே விபத்துக்குள்ளாகியது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here