இருபாலையில் மரணவீட்டில் வாள்வெட்டு:இருவர் படுகாயம்!

0
189

யாழ்ப்பாணம் – இருபாலை மடத்தடிப் பகுதியில் இன்று (22) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிதத பகுதியில் மரணச் சடங்கு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மரணச் சடங்கில் இரு தரப்புக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் வாள் வெட்டுச் சம்பவமாக மாறியுள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் வாழ்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இவற்றை தடுப்பதற்கு சமூக அமைப்புக்கள் முன்வரவேண்டும் எனப் பலரும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here