வவுனியாவில் 6 உந்துருளிகள் எரிந்து நாசம்!

0
566

வவுனியா – கற்குளம் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் நிறுத்தி வைக்கபட்டிருந்த 6 உந்துருளிகள் இனந்தெரியாத நபர்களால் இன்று (22) அதிகாலை எரியூட்டபட்டுள்ளது.

குறித்த வாகன திருத்தகம் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அதிகாலை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் பழுது பார்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 உந்துருளிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வாகன திருத்தகத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அவரால் சிதம்பரபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here