முருகன் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி கேட்டு மனுத்தாக்கல்!

0
600

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர்ச் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் ஜீவசமாதி அடை வதற்கு அனுமதிக்கக் கோரி முருகன் கடந்த முதலாம் திகதி முதல் சிறையில் உணவுதவிர்ப்பில் ஈடுபட்டு வருவ தாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து 7 ஆவது நாளாக நேற்றும் அவர் உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வருகிறார். முருகன் தனது மனைவி நளினி மற்றும் வெளிநாட்டில் உள்ள உறவி னர்களுடன் “வட்ஸ் – அப்’ செயலி மூலம் பேசுவதற்கு அனுமதி கேட்டு சென்னை நீதிமன்றில் வழக்கு நடந்து வருகிறது.

அவ்வாறு உறவினர்க ளுடன் பேச அனுமதி மறுக்கப்படுவ தால் மனமுடைந்த அவர் உணவு தவிர்ப்பை மேற்கொள்வதாகவும், சிறை வளாகத்திலேயே ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு சிறைத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாகவும், தினமும் அவர் குறிப்பிட்ட நேரத்தில் பழங்களை மட்டும் உட்கொள்கிறார் எனவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here