மட்டு.கல்லடி விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு!

0
372

மட்டக்களப்பு கல்லடிப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஐந்து வயது சிறுவன் இன்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

கடந்த 30 ஆம் திகதி சனிக்கிழமை கடைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் கல்லடி அரச விடுதி சந்தியில் எதிரே வந்த உந்துருளி மோதியதால் தந்தையும் , மகனும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறுவன் கடந்த நான்கு நாட்களாக உணவு எதுவும் உட்கொள்ள முடியாத நிலையில் இருந்ததைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை மீண்டும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவனின் மரணத்திற்கான காரணம் சரியாக இதுவரை தெரிய வராத நிலையில் விபத்திற்கு காரணமானவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here