திருகோணமலை விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி!

0
233

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருவில பகுதியில் மகிழுந்து ஒன்று உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்த இருவரில் ஒருவரான ஐந்து பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.

மற்றையவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (01) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here