வேட்புமனு தாக்கல் தினமன்றே ஆளும் கட்சியின் வேட்பாளர் தேர்தல் விதி முறை களை மீறி விட்டார். அரச சொத்து களை பாவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.இன்று நடந்த வேட்புமனு தாக்கல் நிகழ்வுடன் மஹிந்த ராஜபக்சவின் வருகையை அலரி மாளிகையில் இருந்தே அரச ஊடகங்கள் நேரடி ஒலிபரப்பு செயதது என பொது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று எதிர்கட்சிகளின் தலைவர் செயலகத்தில் நடந்த ஊடகவியலளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.