மட்டக்களப்பில் கோரவிபத்து: இளம் ஊடகவியலாளர் பலி!

0
376

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் இன்று புதன்கிழமை உந்துருளி ஒன்றுடன் உழவு இயந்திரம் ஒன்று மோதிய விபத்தில் இளம் ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (13) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீபம் ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருகோணமலை இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு உந்துருளிகளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கல்முனைக்கு உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

பகல் 2 மணியளவில் பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் உந்துருளிகளை வீதி ஓரத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த உழவு இயந்திரம் உந்துருளிகளில் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளிகளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது பலியானார்.

இதனையடுத்து உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here