முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரத்தின் அடையாளங்கள்!

0
1108

முள்ளிவாய்க்கால்
யுத்த மண்ணிலிருந்து…

புலி வீரர்களின் சீருடை
வீரத்தின் அடையாளமாய்
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கின்றன!!!

வலி கொண்ட இனத்தின்
விடிவிற்காக – வரிப்புலி சுமந்து
வீறுகொண்டெழுந்த வேங்கைகள்
அன்று வீரப் போர் புரிந்து….
வீரமரணம் அடைந்த பின்பும்…
தமது உடல்கள் விதைகளாகிப் போக…
தமது உடல்கள் சுமந்த
வரிப் புலிச் சீருடைகளின்
சில பகுதிகளை…
வீரத்தின் அடையாளமாய்
விட்டுச் சென்றுள்ளார்கள்.!!

பத்தாண்டுகள் போன பின்பும்…
மங்கிப் போகாத பொலிவுடன்
யுத்தத்தின் காயங்களைச் சுமந்தவாறு
புலி வீரர்களின் சீருடைகள்
வீரத்தின் அடையாளமாய்
முள்ளிவாய்க்கால் மண்ணிலே
இன்றும் அமைதியாக…
உறங்கிக் கொண்டிருக்கின்றன…!!!

“விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை.!!
இலட்சிய வீரர்கள் இறப்பதுமில்லை!!!”

  • வல்வை அகலினியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here