காணாமல் ஆக்கப்பட்டோரின் கூடாரமும் காணாமல் ஆக்கப்பட்டது!

0
290

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக திருகோணமலையில் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் சுழற்சி முறையில் போராட்டத்துக்கென அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த முறைப்பாட்டை திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் அமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆசா இன்று (04) பதிவு செய்துள்ளார்.

தங்களது போராட்டத்துக்கென அமைக்கப்பட்ட குறித்த கூடாரத்தை, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தின் போது அகற்றியிருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.

இதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மிக விரைவில் எடுத்துத் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here