வடமராட்சியில் சிறிலங்கா காவல்துறை வெறியாட்டம்: மூவர் படுகாயம்!

0
936

யாழ்ப்பாணம் குடத்தனையில் இன்று 01.05.2020 வெள்ளிக்கிழமை வீடொன்றுக்குள் புகுந்த சிறிலங்கா படையினர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் மூவா் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கள்ளமண் ஏற்றியதாக நேற்றைய தினம் குற்றம்சாட்டி குறித்த வீட்டில் விசாரித்துச் சென்ற நிலையில், இன்றைய தினம் காலையில் மீண்டும் அதே வீட்டிற்கு வந்த சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினா் வீட்டிலிருந்த ஆண்கள், பெண்கள், வயோதிபா்கள் மற்றும் சிறுவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா்.

பெண்னொருவரை காலால் மிதித்து அவா் மயங்கிவிழும் வரை அடித்துள்ளனா். இந்நிலையில் தாக்குதலில் காயமுற்ற மூன்று போ் நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here