யாழ்.செம்மணியில் மரத்தில் இருந்து வீழ்ந்து சிறுவன் பலி!

0
473

மரம் ஒன்றில் ஏறிய 13 வயதுச் சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று (30.04.2020) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

கிளிபிடிப்பதற்காக மரத்தில் ஏறிய போது மரம் முறிந்ததன் காரணமாகவே சிறுவன் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here