யாழ்.ஏழாலையில் எரிந்த நிலையில் முதியவரின் சடலம்!

0
471

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் இன்று (26.04.2020) ஞாயிற்றுக்கிழமை காலை எரிந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (வயது -82) என்பவரே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், அவர் தனக்குத் தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here