கனடாவில் மற்றுமொரு புங்குடுதீவுப் பெண் கொரோனாவிற்குப் பலி!

0
805

கனடாவில் வதியும் மேலுமொரு யாழ்ப்பாண பெண் கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

திருமாவளவன் கமலேஸ்வரி என்ற பெண்மணியே கடந்த 23.04.2020 அன்று கனடாவில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த இவர் நீண்டகாலமாக கனடாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தேசங்களில் தொடர்ச்சியாக தமிழ் மக்களும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்து வருகிறார்கள். பல மரணங்கள் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகின்றன. இது கொரோனா மரணங்களின் உண்மையான தரவுகளை எதிர்காலத்தில் பதிவு செய்ய முடியாத நிலைக்கே இட்டுச் செல்லும்.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here