தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரின் இறுதி நிகழ்வு!

0
1813

கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மூழ்கி உயிரிழந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான இ.செந்தூரன் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழில் இடம்பெற்றது.

இறுதி ஊர்வலத்திலும் இறுதி அஞ்சலிக்கூட்டத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்ஈ கட்சியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் கட்சியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஸ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.

கொரோனா பீதிக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பிரமுகர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here