குவைத்தில் இந்திய இளைஞர் ஒருவர் இன்று காய்ச்சலால் மரணம்!

0
332

குவைத்தில் தொழில் புரிந்து வந்த இந்திய கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மாவட்டம் நெயற்றுங்கரை அடுத்த மாயம், அம்பூரி பகுதியைச் சேர்ந்த
ஜோஜோ செபாஸ்டியன்(வயது-34) இன்று பிற்பகல் Adan மருத்துவமனையில் மரணமடைந்தார்.

முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட Mahaboula பகுதியில் வசித்து வேலை செய்து வந்தார் என்பது தெரியவந்துள்ளது.

ஜோஜோ காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்று அவருக்கு மீண்டும் தன்னுடைய அறையில் வைத்து திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதைத் தொடர்ந்து உடனடியாக நண்பர்களின் உதவியுடன் அவர் Mahaboula பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது.

பின்னர் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் Adan மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் காரணமாக நண்பர்களால் ஜோஜோவைப் பின்தொடர முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று
மதியம் 1 மணியளவில் ஜோஜோ மரணமடைந்தார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா பரிசோதனைக்கு அவரது உடல் உட்படுத்தப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாாாவில் இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here